வெள்ளை உள்ளங்களின் சங்கமாம் வெகுளியான காலத்திலே..
வஞ்சகமும் வாட்டுமாம்..
மனம் திறந்து கூற அதுவும் தெரயுமாம்..
உயிருள்ள ஜீவனில் இதுவும் அலையுமாம் . .
ஜீவனல்ல இது மனதின் அஜீரணமாம்..
கறுப்பாடு தானதுவாம் எம்மவர்களில் பலரிலிது உறையுதாம்..
கத்தியும்தான் உடன் வெட்டும்..
கத்தியை விட கூர் மனதையிது அறுக்கும்..
துரோகமும் மறு பெயராம்..
துவளாதீர் இதை கண்டால்..


எம்முடனே கூடவிருக்கும்..
எம்மனதும் நன்கறியும்..
எம் குணமும் அது கொள்ளும்
இன்னொன்றும் கூடவே இருக்கும்..
ஏமாற்றம் அதன் பரிசாம் உம் மனமும் புதுசாய் வெறுக்கும் ..
ஆத்திரம்தான் அதன் விளைவாம்.
உம்மையும் நிலை குலைக்கும்..
நாமறியோம் அதன் விளைவை கண்டதும் கண்ணால் உண்மையே..

சில்லென்று தானிருக்கும்..
சிலகாலம் சிறகடிக்கும் ..
சில்லறைதான் நீர் பெறுவீர் ..
அதன் செயல் தான்காட்டும்..
நம்புவீர் அதையன்றே நல்லவனாய் நல்லதையே நடிக்கும்..
உம் மனதை அலைய வைக்கும்
தன மனது தான் அலையாமலே..
எதிரிபோல் நடை காட்டும்..
மதுநண்பனாய் நீ காண்பாய்..
நட்புக்கும் எதிரியாம்
எண்ணுவாய் நீ கூட இன்பத்தின் விளிம்பதில்..

உம் உரையை உடைத்தெறியும்
உடைவாளும் நொறுங்கி போகும்..
ரகசியங்கள் மெய் மறக்கும் கூடா நட்பு கூட இருந்தால்..
உன் முடிவை அது எடுக்கும்
எதுவும் உன்னால் முடியாமலே போகும் ..
உன் எதிரியவன் அவன் நண்பன்
நீ நம்பாய் அவன் கதையில்..

தைரியமும் தான் உறங்கும்..
உன் கனவெல்லாம் பொய்யாகும்..
நல்லெண்ணம் தான் விலகும்..
அதநெண்ணமும் அதுதானே..
என்றென்றும் நோக்கிடுவீர் உன் நட்பின் நிஜ ஆழத்தை ..
விரட்டிடுவீர் மனம் சொல்லும்..
விரட்டாதீர் உன் நா சொல்லும்..
உம் வாழ்வு உம் கையில் கடலலை
போன்று அது அலையலாமோ..