காலங்கள் கரைந்தோடும் உன் நினைவை விட்டுட்டு ...

அலையலாம் புரண்டெளும்பும் என்மன அலையை எழுப்பிட்டு..

பகலெல்லாம் இரவாகும் உன் மனவொளியே வீசியதால்..

பனியெல்லாம் நீராகும் உனக்காக என் மனகண்ணீர் பொழிய வரம் கிட்டும்..

காடுகளும் நாடாகும் புது உலகம் எமக்கு தந்திட்டு..

ஒட்சிசனும் நிலைமாறும் உன் சுவாசம் எனக்கு மட்டும் தந்திட்டு..

உறுப்பெல்லாம் செயலிழக்கும் என் இதயம் உனக்காக விட்டிட்டு..

நாவுமதில் நரம்பிளக்கும் உன் பெயரை ஓதிட்டு ..

கண்ணுமது குருடாகும் என்மனக்கண்ணை உனக்காக திறந்திட்டு..

மொழியெல்லாம் மறந்துபோகும் உன் பேச்சை கேட்டிட்டு ..

உயிர்கூட பிரிந்து போகும் என்னுயிரை உனக்கு தந்திட்டு .

நிகழ்காலம் சொல்லவில்லை உன் எதிர்காலம் நிர்ணயிக்கும் எம்மை ..

உயிரோடு நான் இருப்பேன் ஓருயிராய் உளமறிய வந்துவிடு..



பூமியதன் விளிம்பினில் சுக மணமதுவும்
நிலவும் வெண்ணிலாவது சகிக்காமலே...

பூமியதன் மூச்சே சுவாசமாம் எமக்குமது
வழங்கிடுதே எம்பிறந்த நாளிலே...

தன் சுழல்கையிலே எம் வாழ்க்கையதும்
சுற்றுலாவோ ஓர் காலத்திலே..

வாழ்கையை எண்ணுவதும் நாம்
நடத்துவது அதுவில்லையோ..

வாழ்க்கை சுழல்வதும் பூமியிலா வியந்திடும்
உம் மனதும் நினைக்காமலே ..

ஹோடியதன் உயிரும் ஓயாசேவகனாகும்
தன் உயிர் பிரியும் முன் இப்பூமியிலே..

உம் வழியால் கஷ்டமும் வேதனையும்
அவை உன் சேவைகளில் ஒன்றோ..

சுற்றுவதும் நிற்காது வாழ்கையும்
இறைரகசியமன்ரோ - சொல்லாது அதுகூட...

சுவாசமது தந்ததும் அதுவே உன்
வாழ்வில் சுவாரசியம் நிறைந்ததும் அதுவே...

நல்லவரோ கெட்டவரோ நாளெல்லாம்
பொறுக்குது தன் உளத்துன்பம் சொல்லாமலே...

நன்றி கெட்டவனாம் எம் குலத்தோன்
அவனவன் பெருமைகள் எப்பிடி சொல்ல...

தன் மூச்சை நிறுத்தினால் உன் பாடு
பெரும் பாடாம் எச்சரிக்கையும் ஒலிக்கும்
ஆண்டொன்றில்..

அனர்த்தங்களை தரும் தன் இயலாமையை
அறிவார் யார் இங்கே சொல்லும்..

நீதானே அறியாய் அதன் வலியை
உன் உடலில் நினைக்காமலே..

சந்ததியும் வந்துடுமாம் சகோதரனாய்
பிதற்ருகிரதை நீ கேளாய் ..

மர்மமொன்று உள்ளதாம் இப்பூமியில்
காண்போரும் நீயல்ல உன் வழியே அதுவாம்..

நீ மூச்சு திணறியது நினைவிருக்கும்
சுனாமியாய் கண்ணீரை இறைத்தும் கவலையல்லவோ...

புரியவில்லை நீ கூட எல்லாம்தான்
வற்றாத வடுக்களே ...

இனியாவது புரிந்துடுவாய் எண்ண மன
ஓட்டங்களும் உன்னிடமே உள்ளது...

இல்லையெனில் தடுக்க மாட்டாய் உன்
மரணத்தையும் இயற்கையினத்தையும் தானே..

ஓரிரு ஆண்டுகளாம் அதுக்குகூட
சொன்னதும் உன் போன்றோர் சிலர் தானே..

நடப்பதை பார்க்கவா துடிக்கிறாய்
திருந்தமாட்டாய் உன் நடப்பாலேயே...



நிலவே நின் முகம் கண்டு நிஜமாவே சிலைதானடி நாள்தோறும்...

நீ மட்டும் தேய்கிறாயோ உன் நினைவால் சோகமதுதான் எனக்கும்..

என் மனசிலையது கண்டாயோ அதுவோ கவலை உனக்கு..

உன் தேய்வை கண்டதும் என் நிஜ விழிதான் அது மனவிழியல்லவே ..

உளறுது என் மனசு நீயுமதை அறிவாயோ தெரியவில்லையே ..

உன் உயிரதுவும் இருப்பது என் உடலதனில் இல்லையோ..

என் உடலதனை எடுப்பாயோ உன் உயிரதனை திருடி ..

உன் ஒளியதனை தந்து என் மன வெளிச்சத்தை தந்தாயே..

நம்ப மாட்டேன் நானுமென்றும் நீயுமதை செய்வாயோவென்று...

உன் சோகமதை அறியேன் நானும் தயங்காமலே கூறு..

தகர்த்துடுவேன் சில நாளில் உன் வானுலகும் அதிரட்டும்..

சிணுங்குகிறாய் என் காதில்இனிய சங்கீதமாய் இருக்கு...

சொல்கின்றேன் செல்லமாயே என் செல்ல கிளியே நீ கேளு..



புத்தாண்டுமொரு புது வரவாம் உம் வாழ்வில் இன்று முதலே..
புத்தொளியும் பரப்பிடுமாம் புது சூரியனாய் உதித்ததே இன்று..
புது மனமும் தந்துடுமாம் நம் சோகமதையும் மறந்திடவே..
கொண்டாடுவீர் நீருமதை உமக்கான நாள் இதுவோ..

இறைவனும் உம் தோழனாவான் உம் மனதும் அவனன்றோ..
நினைத்திட்டால் உம் மனதில் நிலைத்துடுவீர் நெடும் காலம் இவ் உலகில் ...
புவியெல்லாம் புதுவாசம் அது கூட புது மலரன்றோ..
உணர்ந்துடுவீர் நறு மணத்தை இங்கு உம் மனதும் மென்னை தானே..

உறவினரும் உம் பிரியமே அது தெரிந்தும் இன்னும் சோகமேன்..
பிரியங்களை சேர்த்துடுவீர் புத்தாண்டு இன்றல்லவோ..
நண்பரவர் பழகிடுவார் நாவினிக்க பேசிடுவார் ..
சகோதரனாய் போற்றிடுவீர் அவர் மனமும் ஏங்குமன்றோ ..

தன் நினைவை கொண்டுடுவீர் தன்நம்பிக்கையதையும் பெருக்கிடுவீர்..
தன் சோகம் மறந்துடுவீர் அதை தம் பகைவனும் ஆக்கிடுவீர் ..
மாயமதுதான் விலக்கிடுவீர் மன போதையதை விலக்கிடுவீர்..
இதை விடவும் செய்ய உம்மால் முடியும் முயற்சியில் நீர் இறங்கினாலே..

கல்வியதை போற்றிடுவீர் கல்லாததை விளங்கிடுவீர்..
உலகமதை விரும்பிடுவீர் உம வாழ்க்கை அதுவன்றோ..
மெய்யதனை சொல்லிடுவீர் சத்தியமாய் இருந்துடுவீர்..
சரித்திரமும் கண்டுடுவீர் மா மனிதரன்றோ நீர் கூட...


எம் நெஞ்சம் பேச துடிக்குது இவ்வாழ்நிலை தானோ காரணமென்று...

மனம் சொல்லுது கேட்பீர் உம்மனத்தால் தான்  உணர்வீரிங்கு  ...

உறங்க மறுத்த விழிகளால் உதிரம் வடியுதேனோ  ...

மனக்கண்ணின் நிலையது தெரயுது என் சுவைக்கவியிலிங்கு  ...

காரணமும் மன சோதனையும் தான் கருவிகளாம் இங்கு..

புரிவீர் நீரும் எம் துயரதுவும்  வருத்தாது உம் வாழ்வில் கறையாக  ..


உயர்தரமாம் ஒன்று கண்டோம் எம்மவரின்  சொத்து போன்றே..

துரத்திதான் பார்த்தோம் விடாமலே  அதையும் கூடவே  ..

எம்மால் தொடத்தான் முடிந்தது மனதளவில் நன்று....

புதிய அனுபவம் தான் அதுவும்  மறக்காது எம் வாழ்வில்...

மறந்தாலும் நிலைக்காது எம் உயிர் எம்முடனே இராமல்..

ஆருயிராய் மூன்று கண்டேன் தோழராகவே நானும் அங்கு ...

என்றும் நிலைக்கும் நாளையும் தோழர் மனங்கள் என் நினைவினிலே  ..

நான் கண்ட கனவு நினைவாகும் நம்பிக்கைதான்  என் மனதில் இன்று..

தோழரது  கனவும் அதுவென்று புரிந்தேன் நானுமன்றே ...

படிக்கதான்  கிளம்பினோம் கனவுக்கு பதில் நாம் சொல்ல தான் வேறெதுக்கு  ..

நடத்தினோம் படிப்பைகூட செல்லமாய்தான் ஆசையுடனே  ..

எம் மனமதுவும்  மாறியதோ  ஏனென்று சொல்வேன் தமக்குமது  தெரிமோ...

பல்கலையும் கற்க ஆயத்தமாம் நாம் இன்று அதுவரையும் தான் அன்றோ இதுபுரியாது..

மனதில் இருபதுவோ பல சோக கறைகளாம் சில்அனுபவம் கூட அதிலுண்டு..


என் நண்பன் அனுபவம் தான் முதல் இங்கு சொல்லுது நீரும் நன்றேகேளும்...

சென்றவனாம்  இடமொன்று படிக்க அல்ல வதைபடவே தான் என்று சொல்வதும் என் மனம் தான் ..

ஒரு வருடம் இல்லையாம் அவன் வாழ்வில் மறைந்ததும்  இருட்டாகவே...

அக்காரண காரர்களையும் நீர் கூட அறிவீர் என்றும் சோகம்தான் ...

உயிர் மட்டும் தான் உடமைஎன்று அவன் மட்டும் வந்தான் எம் கண்முன்னே..

நாம் கண்டோம் அவன் மனதை அவனை அல்ல மனக்கண்ணீரை தான் அன்றோ ...

கணிதம் என்றால் மன பிரியன் தான் அவர் கூட நன்கெமக்கு தெரியும் அதுவும் கூட ..

பயமென்றால் மறுசகாவாம் மனதில் அவர் சொல்லார் அதை யாம் அறிவோம்...

சிந்தை தான் சித்திரிப்பு தானோ!!அதுதானோ அவர் மனது மென்மை என்று கண்டேன் நானும்...





மற்றொருவன் என் சகாவாம் பௌதீக பிரியனாம் அவனும் அங்கெ..

நான் கண்டதும்  அவன் வாழ்வில் பெரும் அனுபவம் தானோ..

பார்த்தாலே  மனம்  நடுங்கும் பயங்கரமாய் அவன் மனம் கண்டு..

பயமென்றால் அவன் வாழ்வில் அர்த்தம் ஏதாம்!! அவர் சொல்வார் எமக்குகூட அதை நன்றே.....

இருட்டென்றால் கஷ்டம் தான் அவன் மனதை நாமறிய...

என் விழி கண்டது அன்றொருநாள் நன்கே புரிந்தது அது எதுவென்று...

நான் சொல்லேன் அதை இங்கு என் மனம் துரோகியல்ல அவனுக்கு என்றும்..

பல்கலையும் கற்க செல்வான் அவன் கூட திறமையின் பரிசதனை பெற்று..

என் செய்வது ஆமை தான் அவன் நடையில் கூட யாம் கண்டோம் பல அனுபவம் தான்...

வெறுப்பு வள்ளல் நீ என்று பட்டமாம் பிடிக்கவில்லையாம் அப்பட்டம் கூட...

என் செய்வோம் நாமும்   மாறிவிட்டான் அவன்கூட மனத்தால் இன்று..




அனுபவசாலியது  எம்முடனே  ஒருவனாம் பெருமைதானோ எமக்கு நன்றே...

இவர் கூட பார்த்துவிட்டார் சோதனையின் மறுபக்கத்தை எம்முடனே...

முடிவுகளை தெளிவாக்கும் இவர் மனதை நன்கறிதல் எம் கடமையன்றோ...

என் நா கூட அடங்கும் இவர் மொழியில் என்றென்றும் ...

அனுபவ  எல்லையது  அறிவதுதான் அவர்  இலக்காகுமோ....

அவர் சொல்வதில்லை எதுவும்  நாம் சொல்வோம்  அவருக்கு நன்றே...

தன் மனது தான் அறிவார் எம்மத்தை அறியவைப்பார் எமக்கு கூட..

எம்மன வலிமை எதுவென்று அறிந்ததும் இவர் மட்டும் தானோ!! புரிகிறது எமக்கு....

பல்கலையும் இவர் கற்பார் நீர் அறிவீரோ  அவர்தன்  திறமை...



என் பற்றி யான் சொல்லேன் என் பேனா எழுதாது என் முன்னால் ..

நீர் நன்கறியலாம் என் சகாவிடம் நின்பேனாக்கு தெரியாமல்...

என் பேனா பொய் உரைக்காது இவ்விடம் சொல்கின்றேன் அதைகூட...

நான் கூட ஓருயிர் தான் உம்போல தான் என்று நான் சொல்வேன்..

நம்புவதும் இல்லாததும் நான் அறியேன் என் மனத்தால்...

இவ்வளவும் தான் சொல்லும் என்மன வாயில் என் பற்றி இங்கு ..

மனதடக்கம் வேணுமன்றோ எம் போன்ற ஜீவனுக்கு அதையும் நன்கறிவீர் நீரும் என்றோ...




இத்தனை மனதுக்கோ  பல குறைதான் நானே உரைப்பேன் என் கடமையது..

எம்முரிமை எமக்கு இல்லை அழுகிறது எம் நெஞ்சம் இன்றும் ஓயாமல்..

கொள்கையுடன் தொடங்கினோம் நான் மனிதர் தான் அன்றோ...

அராஜகம் மடியும் உம் போன்றோர் துணை நின்றால் எம்முடனே.....

பெண் கூட எம் குழுவில் ஒராள் .. நமபுவீரா இதைகூட நான் சொன்னால்...

ஆலோசனைக்கு தான் அவமனது வேறு எதுக்கும் அல்ல..

இவ் விடம் கூறுவேன் அதை மட்டும் என் கவியால்...

நண்பிகள் தான் கொண்டோர் அவர்நல் மனது நன்கறிவார்....

மூநான்கு சொன்னார் எம்மக்கும் கூட ஏச்சுடன் தன் மனபேச்சுகளை ..

அவர் உரைத்தது உண்மைதான் எமக்கு உறைத்ததும் உண்மைதான்...






வேண்டுகின்றோம் இக்கவி கொண்டு தோள் கொடுப்பீர் நீரும் எமக்கென்று....

மரணம் கண்டு ஒளிப்பவர் நாமல்ல மரணம் ஒழியும் எம் வரவால் என்று நாம் சொல்வோம் ...

நன்றாக விளங்குவீர் நீர் கூட..புரியாதோர் கிடக்கட்டும் எனக்கென்ன..

அகிம்சை சொல்லும் எம் வழியை செல்வோம் அதன் வழியில் நாம் என்றும்...

சொல்கின்றேன் கேளுங்கள் எம்பாதம் தான் மிதிக்கும் எம்மண்ணை என்றோருநாள்...