என் மன வானத்தின் கூரையில் வரையறைடின்றி பறந்து விரிந்த உன் மனமேகம் எம்மை அலசும் காலத்தின் கோலத்தால் மட்டுமின்றி உன் அன்பெனும் மழை என்னில் பொழிந்து அதனால் ஈரமான என் மனதில் இருட்டெல்லாம் மறைவாக்க திடீரென மின்னலாகி வந்த உன் மன உரசல்களால் தாக்கமாகிய என் இதயத்துக்கு இடிபோல அதுவும் இடித்து உன் நினைவெல்லாம் என்னிலின்று சிதறிப்போக என் நினைவையே இழந்த நிறையற்ற என் நினைவுகள் உனக்காக வெள்ளமாகி ஒன்றாகும் உந்தன் அதே அன்பெனும் மழையினாலே.....
மறைவாகி என் மனதை மயக்கியதும் நீயே..
மழை போன்ற உன் அன்பால் நனைந்தவனும் நானே...
என்றும் விலையில்லா வினையில்லா நீயே என் வாழ்வே...
உன்னில் நிலைத்தவனும் உன்னை நினைத்தவனும் மறைவான நான் தானே!!..
கடல் போன்ற உன் எண்ணவெள்ளம் கரைபுரளும் என்னில் நாளும்....
வரையறையில்லா என் மன வயலெல்லாம் உன் வாழ்வரம்பாலே உள்ளில் சூழும்...
உன்னால் மின்னலாகி என்னில் உரசிய மின் தாக்கம் என்னிலினியும் வாழும் ..
நானும் மிரளாமல் மனம் சிதறாமல் மீட்டெடுப்பேன், உன்னை இனி என் மனம் ஆளும்...