என் மன வானத்தின் கூரையில் வரையறைடின்றி பறந்து விரிந்த உன் மனமேகம் எம்மை அலசும் காலத்தின் கோலத்தால் மட்டுமின்றி உன் அன்பெனும் மழை என்னில் பொழிந்து அதனால்  ஈரமான என்  மனதில் இருட்டெல்லாம் மறைவாக்க திடீரென மின்னலாகி வந்த உன்  மன உரசல்களால் தாக்கமாகிய என் இதயத்துக்கு இடிபோல அதுவும்   இடித்து உன்  நினைவெல்லாம் என்னிலின்று சிதறிப்போக என் நினைவையே இழந்த நிறையற்ற என் நினைவுகள் உனக்காக  வெள்ளமாகி ஒன்றாகும் உந்தன்  அதே அன்பெனும்  மழையினாலே.....

மறைவாகி என் மனதை மயக்கியதும் நீயே..

மழை போன்ற உன் அன்பால் நனைந்தவனும் நானே...

என்றும் விலையில்லா வினையில்லா நீயே  என் வாழ்வே...

உன்னில் நிலைத்தவனும் உன்னை நினைத்தவனும் மறைவான  நான் தானே!!..





கடல் போன்ற உன் எண்ணவெள்ளம் கரைபுரளும் என்னில்  நாளும்....

வரையறையில்லா என் மன வயலெல்லாம்  உன் வாழ்வரம்பாலே உள்ளில்  சூழும்...

உன்னால் மின்னலாகி என்னில் உரசிய மின் தாக்கம் என்னிலினியும்   வாழும் ..

நானும் மிரளாமல் மனம் சிதறாமல் மீட்டெடுப்பேன், உன்னை இனி என் மனம் ஆளும்...


உன் கண்களில் அமைதி கண்டேன்,
       காரணம் அறிய வந்தேன்,
             பெண்களில் உன்னிடமே நானும் பேராண்மை காண வந்தேன்..


சிந்தனை இன்றிழந்தேன்,
     உன்னில் சிற்பமாய் நானிருந்தேன் ,
           என் கண்களில் ஈரம் இன்றோ  காரணம் சொல்லடியோ..


உன் பொறுமையில் பெருமை கண்டேன்,
       பொறாமையில் நானும்  அலைந்தேன்,
               உன்னில் வெறுமையில் வந்தவனேன்னை விரட்டாதே கண்மணியே..


உன்னில் வீணான என் நினைவில் வினை உனக்கு இருக்கடியோ ,
          என்றும் விரும்பாத என் நினைவை வெறுக்காதே மலர்விழியே..


தாமாக எனையிழந்தேன்,
     உன்னில் தாராளம் தவள கண்டேன்,
           இன்றோ வாழ்வென்னும் சாவினிலே வரம்பொன்றில் நானலர்ந்தேன்..


சோகமா உனை விரட்டும்! சொல்லடி நீயின்றே ..
        உன்னை சோத்தித்து பார்க்கையில் நான் சோதனை அதை மறப்பேன்.. 


உன் அன்பினது ஈரம்  காயவில்லையென்று    எந்தன் ஆறுதல் எனக்கு சொல்கிறது..  


உன்  நட்பினது நன்மை பிறர்க்கு புரியவில்லையென்று  எம் பிரிவின்று பிதற்றுகிறது..


உன் சொற்கள் தான் மகிழ்வெனக்கென்று   என் சோகமின்று  இசைக்கிறது..  


உன் நிழல் போன்ற நட்பு  எங்கேயென்று என் நிழலின்று  யெனை  தொடர மறுக்கிறது..  


உன் கலையழகில் கவி சொல்லும் மெய்யான என்நாவும் இன்றோ சுவையின்றி  விறைகின்றது...  


உன் நிலையழகை  நிறுத்தாமல் கவிபுனையும் கைவிரலும் என் கையெழுத்தை மறக்கிறது..  


உன் கடல்நீல கருவிழிகள் என் மனக்கரை காண ஏங்கவில்லையென்று என் எண்ணவலையோசை  அலைகிறது..  


உன் சிரிப்பினது வெள்ளொளி  சிதறல்கள் விளங்கவில்லையென்று பிணைவான என் கண்ணிமைகள் தமைபிரிய நினைக்கிறது.. 


உன் சிறுபிள்ளைத்தனத்தின் மனச்சிதையாமை எங்கென்று சிதறிய என் நெஞ்சின்  சிலதுகள்கள் அழுகிறது..  


என்  வருங்கால வாழ்விலுன்னை  வலைப்பூவில் காணுவாயென்று   கதறிய என்னிதயம் உதிரக்கவிபுனைய  வினைகிறது..