தமிழனில் தரம் காணும் தவறான உலகமடா..
நீயும் தரமின்றி  போகாதே உனக்கிதுவோர்  தரமான சொல்சாவியடா..
உன்னையின்று  சாவடிக்கும் உளறுமனதில் எங்கே நீதி ஆளுமடா..
மதிக்காதே  மிதியவரை நீயும் மதி கொண்ட தமிழ் ஆவியடா..



தமிழ் சரித்திரத்தின் சறுக்கலில்  சயனம் கொண்ட அவை  பாவியடா...
நாமுமிதை பயமற்று கூறலாமே  புதுப்  பணி செய்யும் நாம்  அப்பாவியடா..
உலகத்தின் மாற்றத்தால் அவர் தவறும்  மாறுமாடா ...
உந்தன் பொய்யுரையோ மெய்யுரையோ  எங்கு பொருளின்றி போகுமடா.. 
பொறுத்துகொள் நீஎன்றோ  மெய்பொருள் சொல்வாய் ஒரு காலமடா..
  
  


உணர்வுள்ளோர் கூறட்டும் உருப்படியாய்  ஏதும் ஆகுமாடா ...
உணர்விருந்தால் நீயுமின்று உலகை உருட்டிதான் பாருவடா...
வதை கண்டு சிதைப்பட்ட வலியுனக்கு போதுமாடா...
கதை மட்டும் சொல்லாதே உன்னை காவியமா மாத்துவடா...


அரைநொடியில் என் வாழ்வும் அமைதிதான் போல இருக்கு...
        மறுநொடியில் எனக்குமினி மறுபிறவிக்கு தாய் இருக்கு..
கரடு முரடான கொடும் கடும் பாதை என்  கண்முன்னே  தெரியுது ,
             ஆனால்    முடிந்தவரை எனக்குமிங்கு தெளிவாய்  முழுப்பார்வை தெரியுது..
முடியாத என்வாழ்வில் முழுமைகள் தான்  எங்க இருக்கு..
                   முயலவில்லை நானுமதுக்கு முட்டாள் வேலை போல இருக்கு..
மூன்னாங்கு நிமிடத்துக்கு  என் மூச்சு காற்று அளவாய்  இருக்கு...
                    ஆனாலும் நான் அதனை உடன்முடிப்பேன்   போல இருக்கு...
உணர்வெல்லாம் போகுது, எந்தன் உடல் உண்மையாவே சாகுது..
                 அரைநொடியில் என் வாழ்வும் அதனால்  அமைதிதான் போல இருக்கு..


அறிவுள்ளோர் கூறுவீர் மறு பிறவி இனி எதுக்கெனக்கு,
                 இப்பிறப்பில் என்   இருதயமும் இறுகுது-அதனால்  இயலாமலே எனக்கிருக்கு..
கால் கை எங்கெல்லாம் மரக் கட்டை போல இருக்கு..
                 மரணித்த என் உடலுக்கு தீமூட்ட  அதுதான் முழுப்பொறுப்பு..
மூன்றேகால் நொடிதானாம் என் மூளையும் சொல்லி தருமாம்..
               முயலாதாம் அதுவுமினி முன்னாணும் செயலில்லையே...
கணமெல்லாம் முடிந்திட்டு எந்தன்  காவியமும் அழிந்திட்டு ...
                   பாவியவன் எனக்கிங்கு ஏன் எதுக்கு மறுபிறப்பு...


மனிதத்தின் தத்துவங்கள்...
அவை புனித்தத்தின் குறள் நெடில்கள்

மாறிவிட்ட மன இயல்புகள்.........
அம் மாற்றத்தின் செயல் குணங்கள்.....

புதுவாழ்வின் புது இடர்கள்....
இடராலே மன புதர்கள்..

நிலையற்ற கண நிம்மதிகள்..
அவை நீண்டகால கால் புள்ளிகள் ...

தளராத சிலை நெஞ்சம்....
தவிக்காத தனி கலை நெஞ்சம் ...

புயல் போன்ற செயல் பலங்கள்...
அதில் புதுமையின் நினைவலைகள்...

விழியில் காணாத மணவாழ்வு..
அதனால் கணிக்காத கணநிமிடம்...

இன்றும் இரவினில் சோதிப்பு..
அதனால் இருட்டெல்லாம் பாதிப்பு ...

மலை போன்ற சிலர் மனது...
அவை மறைவான புது உலகு...

நிறுத்தாமல் புவி சுழற்சி ...
அதில் வெறுப்பாயே எம் வாழ்வு...

வாழ்வில் நிறுத்தாத கை வரிகள்..
நொடியும் எம் பிறப்பதனை சிறப்பாக்கும்...