அரைநொடியில் என் வாழ்வும் அமைதிதான் போல இருக்கு...
        மறுநொடியில் எனக்குமினி மறுபிறவிக்கு தாய் இருக்கு..
கரடு முரடான கொடும் கடும் பாதை என்  கண்முன்னே  தெரியுது ,
             ஆனால்    முடிந்தவரை எனக்குமிங்கு தெளிவாய்  முழுப்பார்வை தெரியுது..
முடியாத என்வாழ்வில் முழுமைகள் தான்  எங்க இருக்கு..
                   முயலவில்லை நானுமதுக்கு முட்டாள் வேலை போல இருக்கு..
மூன்னாங்கு நிமிடத்துக்கு  என் மூச்சு காற்று அளவாய்  இருக்கு...
                    ஆனாலும் நான் அதனை உடன்முடிப்பேன்   போல இருக்கு...
உணர்வெல்லாம் போகுது, எந்தன் உடல் உண்மையாவே சாகுது..
                 அரைநொடியில் என் வாழ்வும் அதனால்  அமைதிதான் போல இருக்கு..


அறிவுள்ளோர் கூறுவீர் மறு பிறவி இனி எதுக்கெனக்கு,
                 இப்பிறப்பில் என்   இருதயமும் இறுகுது-அதனால்  இயலாமலே எனக்கிருக்கு..
கால் கை எங்கெல்லாம் மரக் கட்டை போல இருக்கு..
                 மரணித்த என் உடலுக்கு தீமூட்ட  அதுதான் முழுப்பொறுப்பு..
மூன்றேகால் நொடிதானாம் என் மூளையும் சொல்லி தருமாம்..
               முயலாதாம் அதுவுமினி முன்னாணும் செயலில்லையே...
கணமெல்லாம் முடிந்திட்டு எந்தன்  காவியமும் அழிந்திட்டு ...
                   பாவியவன் எனக்கிங்கு ஏன் எதுக்கு மறுபிறப்பு...


This entry was posted on 10:24 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

    மதுரை சரவணன் said...

    super...vaalththukkal

  1. ... on August 5, 2011 at 11:59 AM  
  2. ராஜ்பிரதாப் said...

    ungal karuthuku nanri..

  3. ... on August 5, 2011 at 12:06 PM