தமிழனில் தரம் காணும் தவறான உலகமடா..
நீயும் தரமின்றி  போகாதே உனக்கிதுவோர்  தரமான சொல்சாவியடா..
உன்னையின்று  சாவடிக்கும் உளறுமனதில் எங்கே நீதி ஆளுமடா..
மதிக்காதே  மிதியவரை நீயும் மதி கொண்ட தமிழ் ஆவியடா..



தமிழ் சரித்திரத்தின் சறுக்கலில்  சயனம் கொண்ட அவை  பாவியடா...
நாமுமிதை பயமற்று கூறலாமே  புதுப்  பணி செய்யும் நாம்  அப்பாவியடா..
உலகத்தின் மாற்றத்தால் அவர் தவறும்  மாறுமாடா ...
உந்தன் பொய்யுரையோ மெய்யுரையோ  எங்கு பொருளின்றி போகுமடா.. 
பொறுத்துகொள் நீஎன்றோ  மெய்பொருள் சொல்வாய் ஒரு காலமடா..
  
  


உணர்வுள்ளோர் கூறட்டும் உருப்படியாய்  ஏதும் ஆகுமாடா ...
உணர்விருந்தால் நீயுமின்று உலகை உருட்டிதான் பாருவடா...
வதை கண்டு சிதைப்பட்ட வலியுனக்கு போதுமாடா...
கதை மட்டும் சொல்லாதே உன்னை காவியமா மாத்துவடா...


This entry was posted on 10:25 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: