ஓராண்டு பயணத்தில் ஒரமாய் நானிருந்து ஒட்டு கேட்ட வேற்றுமைகள் இனியும் ஓய்வாகும் தானோ..
ஆண்டாண்டு காலத்தில் எனை அடித்த மனவலைகள் அநீதியினை மட்டும்தான் ஓயா  ஓசையாய்  இனியும் தருமோ-இனியும்,
கண்முன் மாண்டாரை நினைப்பதில்லை -மதிகெட்டோர் தேவையில்லை ,என்று  என் மனம் நீதி சொல்லிய பின்னும்  மரணம் தான் என் வாழ்வோ..
வீண் ஆனா இவ்வாழ்வில் விலைமதிப்பை தேடியவன்- நானும் விரல் நுனியில் எனை வெறுத்தேன் ,இதுவும் என்  வீண் செய்கை தானோ..




ஆனாலும் நான் இன்று அறையுயிராய் இருக்கிறேன் - அவ்வுயிர் மட்டும் என் சொத்தாம் அறிவீரோ நீரோ..
எந்தன் காணாதா மறு ஜென்மம் கணிப்பதத்காய்  சோதிடர்கள் -சாதக எண் ஒழுங்கை மறக்கிறாரே ,அதுவும் எந்தன் இயல்பினாலே  தானோ..
கோணியதாய் என்வாழ்வு என் கொள்கையினால் மனம் தாழ்வு -அதனால் தாண்டவமும்  ஆடுகிறேன் நன்றாய்  தரம் பாரும் நீரோ..
எனவே -ஆண்டவனை நாடுகிறேன்  , எந்தன் அரையுயிரை போக்குகிறேன் ,அதற்கு  அனுமதியை தருவக்கு எந்தன் உடல்  அனுமதிக்கும் தானோ!!