எம் நெஞ்சம் பேச துடிக்குது இவ்வாழ்நிலை தானோ காரணமென்று...

மனம் சொல்லுது கேட்பீர் உம்மனத்தால் தான்  உணர்வீரிங்கு  ...

உறங்க மறுத்த விழிகளால் உதிரம் வடியுதேனோ  ...

மனக்கண்ணின் நிலையது தெரயுது என் சுவைக்கவியிலிங்கு  ...

காரணமும் மன சோதனையும் தான் கருவிகளாம் இங்கு..

புரிவீர் நீரும் எம் துயரதுவும்  வருத்தாது உம் வாழ்வில் கறையாக  ..


உயர்தரமாம் ஒன்று கண்டோம் எம்மவரின்  சொத்து போன்றே..

துரத்திதான் பார்த்தோம் விடாமலே  அதையும் கூடவே  ..

எம்மால் தொடத்தான் முடிந்தது மனதளவில் நன்று....

புதிய அனுபவம் தான் அதுவும்  மறக்காது எம் வாழ்வில்...

மறந்தாலும் நிலைக்காது எம் உயிர் எம்முடனே இராமல்..

ஆருயிராய் மூன்று கண்டேன் தோழராகவே நானும் அங்கு ...

என்றும் நிலைக்கும் நாளையும் தோழர் மனங்கள் என் நினைவினிலே  ..

நான் கண்ட கனவு நினைவாகும் நம்பிக்கைதான்  என் மனதில் இன்று..

தோழரது  கனவும் அதுவென்று புரிந்தேன் நானுமன்றே ...

படிக்கதான்  கிளம்பினோம் கனவுக்கு பதில் நாம் சொல்ல தான் வேறெதுக்கு  ..

நடத்தினோம் படிப்பைகூட செல்லமாய்தான் ஆசையுடனே  ..

எம் மனமதுவும்  மாறியதோ  ஏனென்று சொல்வேன் தமக்குமது  தெரிமோ...

பல்கலையும் கற்க ஆயத்தமாம் நாம் இன்று அதுவரையும் தான் அன்றோ இதுபுரியாது..

மனதில் இருபதுவோ பல சோக கறைகளாம் சில்அனுபவம் கூட அதிலுண்டு..


என் நண்பன் அனுபவம் தான் முதல் இங்கு சொல்லுது நீரும் நன்றேகேளும்...

சென்றவனாம்  இடமொன்று படிக்க அல்ல வதைபடவே தான் என்று சொல்வதும் என் மனம் தான் ..

ஒரு வருடம் இல்லையாம் அவன் வாழ்வில் மறைந்ததும்  இருட்டாகவே...

அக்காரண காரர்களையும் நீர் கூட அறிவீர் என்றும் சோகம்தான் ...

உயிர் மட்டும் தான் உடமைஎன்று அவன் மட்டும் வந்தான் எம் கண்முன்னே..

நாம் கண்டோம் அவன் மனதை அவனை அல்ல மனக்கண்ணீரை தான் அன்றோ ...

கணிதம் என்றால் மன பிரியன் தான் அவர் கூட நன்கெமக்கு தெரியும் அதுவும் கூட ..

பயமென்றால் மறுசகாவாம் மனதில் அவர் சொல்லார் அதை யாம் அறிவோம்...

சிந்தை தான் சித்திரிப்பு தானோ!!அதுதானோ அவர் மனது மென்மை என்று கண்டேன் நானும்...





மற்றொருவன் என் சகாவாம் பௌதீக பிரியனாம் அவனும் அங்கெ..

நான் கண்டதும்  அவன் வாழ்வில் பெரும் அனுபவம் தானோ..

பார்த்தாலே  மனம்  நடுங்கும் பயங்கரமாய் அவன் மனம் கண்டு..

பயமென்றால் அவன் வாழ்வில் அர்த்தம் ஏதாம்!! அவர் சொல்வார் எமக்குகூட அதை நன்றே.....

இருட்டென்றால் கஷ்டம் தான் அவன் மனதை நாமறிய...

என் விழி கண்டது அன்றொருநாள் நன்கே புரிந்தது அது எதுவென்று...

நான் சொல்லேன் அதை இங்கு என் மனம் துரோகியல்ல அவனுக்கு என்றும்..

பல்கலையும் கற்க செல்வான் அவன் கூட திறமையின் பரிசதனை பெற்று..

என் செய்வது ஆமை தான் அவன் நடையில் கூட யாம் கண்டோம் பல அனுபவம் தான்...

வெறுப்பு வள்ளல் நீ என்று பட்டமாம் பிடிக்கவில்லையாம் அப்பட்டம் கூட...

என் செய்வோம் நாமும்   மாறிவிட்டான் அவன்கூட மனத்தால் இன்று..




அனுபவசாலியது  எம்முடனே  ஒருவனாம் பெருமைதானோ எமக்கு நன்றே...

இவர் கூட பார்த்துவிட்டார் சோதனையின் மறுபக்கத்தை எம்முடனே...

முடிவுகளை தெளிவாக்கும் இவர் மனதை நன்கறிதல் எம் கடமையன்றோ...

என் நா கூட அடங்கும் இவர் மொழியில் என்றென்றும் ...

அனுபவ  எல்லையது  அறிவதுதான் அவர்  இலக்காகுமோ....

அவர் சொல்வதில்லை எதுவும்  நாம் சொல்வோம்  அவருக்கு நன்றே...

தன் மனது தான் அறிவார் எம்மத்தை அறியவைப்பார் எமக்கு கூட..

எம்மன வலிமை எதுவென்று அறிந்ததும் இவர் மட்டும் தானோ!! புரிகிறது எமக்கு....

பல்கலையும் இவர் கற்பார் நீர் அறிவீரோ  அவர்தன்  திறமை...



என் பற்றி யான் சொல்லேன் என் பேனா எழுதாது என் முன்னால் ..

நீர் நன்கறியலாம் என் சகாவிடம் நின்பேனாக்கு தெரியாமல்...

என் பேனா பொய் உரைக்காது இவ்விடம் சொல்கின்றேன் அதைகூட...

நான் கூட ஓருயிர் தான் உம்போல தான் என்று நான் சொல்வேன்..

நம்புவதும் இல்லாததும் நான் அறியேன் என் மனத்தால்...

இவ்வளவும் தான் சொல்லும் என்மன வாயில் என் பற்றி இங்கு ..

மனதடக்கம் வேணுமன்றோ எம் போன்ற ஜீவனுக்கு அதையும் நன்கறிவீர் நீரும் என்றோ...




இத்தனை மனதுக்கோ  பல குறைதான் நானே உரைப்பேன் என் கடமையது..

எம்முரிமை எமக்கு இல்லை அழுகிறது எம் நெஞ்சம் இன்றும் ஓயாமல்..

கொள்கையுடன் தொடங்கினோம் நான் மனிதர் தான் அன்றோ...

அராஜகம் மடியும் உம் போன்றோர் துணை நின்றால் எம்முடனே.....

பெண் கூட எம் குழுவில் ஒராள் .. நமபுவீரா இதைகூட நான் சொன்னால்...

ஆலோசனைக்கு தான் அவமனது வேறு எதுக்கும் அல்ல..

இவ் விடம் கூறுவேன் அதை மட்டும் என் கவியால்...

நண்பிகள் தான் கொண்டோர் அவர்நல் மனது நன்கறிவார்....

மூநான்கு சொன்னார் எம்மக்கும் கூட ஏச்சுடன் தன் மனபேச்சுகளை ..

அவர் உரைத்தது உண்மைதான் எமக்கு உறைத்ததும் உண்மைதான்...






வேண்டுகின்றோம் இக்கவி கொண்டு தோள் கொடுப்பீர் நீரும் எமக்கென்று....

மரணம் கண்டு ஒளிப்பவர் நாமல்ல மரணம் ஒழியும் எம் வரவால் என்று நாம் சொல்வோம் ...

நன்றாக விளங்குவீர் நீர் கூட..புரியாதோர் கிடக்கட்டும் எனக்கென்ன..

அகிம்சை சொல்லும் எம் வழியை செல்வோம் அதன் வழியில் நாம் என்றும்...

சொல்கின்றேன் கேளுங்கள் எம்பாதம் தான் மிதிக்கும் எம்மண்ணை என்றோருநாள்...


This entry was posted on 7:31 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: