புத்தாண்டுமொரு புது வரவாம் உம் வாழ்வில் இன்று முதலே..
புத்தொளியும் பரப்பிடுமாம் புது சூரியனாய் உதித்ததே இன்று..
புது மனமும் தந்துடுமாம் நம் சோகமதையும் மறந்திடவே..
கொண்டாடுவீர் நீருமதை உமக்கான நாள் இதுவோ..

இறைவனும் உம் தோழனாவான் உம் மனதும் அவனன்றோ..
நினைத்திட்டால் உம் மனதில் நிலைத்துடுவீர் நெடும் காலம் இவ் உலகில் ...
புவியெல்லாம் புதுவாசம் அது கூட புது மலரன்றோ..
உணர்ந்துடுவீர் நறு மணத்தை இங்கு உம் மனதும் மென்னை தானே..

உறவினரும் உம் பிரியமே அது தெரிந்தும் இன்னும் சோகமேன்..
பிரியங்களை சேர்த்துடுவீர் புத்தாண்டு இன்றல்லவோ..
நண்பரவர் பழகிடுவார் நாவினிக்க பேசிடுவார் ..
சகோதரனாய் போற்றிடுவீர் அவர் மனமும் ஏங்குமன்றோ ..

தன் நினைவை கொண்டுடுவீர் தன்நம்பிக்கையதையும் பெருக்கிடுவீர்..
தன் சோகம் மறந்துடுவீர் அதை தம் பகைவனும் ஆக்கிடுவீர் ..
மாயமதுதான் விலக்கிடுவீர் மன போதையதை விலக்கிடுவீர்..
இதை விடவும் செய்ய உம்மால் முடியும் முயற்சியில் நீர் இறங்கினாலே..

கல்வியதை போற்றிடுவீர் கல்லாததை விளங்கிடுவீர்..
உலகமதை விரும்பிடுவீர் உம வாழ்க்கை அதுவன்றோ..
மெய்யதனை சொல்லிடுவீர் சத்தியமாய் இருந்துடுவீர்..
சரித்திரமும் கண்டுடுவீர் மா மனிதரன்றோ நீர் கூட...


This entry was posted on 1:42 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: