பூமியதன் விளிம்பினில் சுக மணமதுவும்
நிலவும் வெண்ணிலாவது சகிக்காமலே...

பூமியதன் மூச்சே சுவாசமாம் எமக்குமது
வழங்கிடுதே எம்பிறந்த நாளிலே...

தன் சுழல்கையிலே எம் வாழ்க்கையதும்
சுற்றுலாவோ ஓர் காலத்திலே..

வாழ்கையை எண்ணுவதும் நாம்
நடத்துவது அதுவில்லையோ..

வாழ்க்கை சுழல்வதும் பூமியிலா வியந்திடும்
உம் மனதும் நினைக்காமலே ..

ஹோடியதன் உயிரும் ஓயாசேவகனாகும்
தன் உயிர் பிரியும் முன் இப்பூமியிலே..

உம் வழியால் கஷ்டமும் வேதனையும்
அவை உன் சேவைகளில் ஒன்றோ..

சுற்றுவதும் நிற்காது வாழ்கையும்
இறைரகசியமன்ரோ - சொல்லாது அதுகூட...

சுவாசமது தந்ததும் அதுவே உன்
வாழ்வில் சுவாரசியம் நிறைந்ததும் அதுவே...

நல்லவரோ கெட்டவரோ நாளெல்லாம்
பொறுக்குது தன் உளத்துன்பம் சொல்லாமலே...

நன்றி கெட்டவனாம் எம் குலத்தோன்
அவனவன் பெருமைகள் எப்பிடி சொல்ல...

தன் மூச்சை நிறுத்தினால் உன் பாடு
பெரும் பாடாம் எச்சரிக்கையும் ஒலிக்கும்
ஆண்டொன்றில்..

அனர்த்தங்களை தரும் தன் இயலாமையை
அறிவார் யார் இங்கே சொல்லும்..

நீதானே அறியாய் அதன் வலியை
உன் உடலில் நினைக்காமலே..

சந்ததியும் வந்துடுமாம் சகோதரனாய்
பிதற்ருகிரதை நீ கேளாய் ..

மர்மமொன்று உள்ளதாம் இப்பூமியில்
காண்போரும் நீயல்ல உன் வழியே அதுவாம்..

நீ மூச்சு திணறியது நினைவிருக்கும்
சுனாமியாய் கண்ணீரை இறைத்தும் கவலையல்லவோ...

புரியவில்லை நீ கூட எல்லாம்தான்
வற்றாத வடுக்களே ...

இனியாவது புரிந்துடுவாய் எண்ண மன
ஓட்டங்களும் உன்னிடமே உள்ளது...

இல்லையெனில் தடுக்க மாட்டாய் உன்
மரணத்தையும் இயற்கையினத்தையும் தானே..

ஓரிரு ஆண்டுகளாம் அதுக்குகூட
சொன்னதும் உன் போன்றோர் சிலர் தானே..

நடப்பதை பார்க்கவா துடிக்கிறாய்
திருந்தமாட்டாய் உன் நடப்பாலேயே...


This entry was posted on 9:25 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: