அனைத்துலகம் கூறும் நிஜ அனுபத்தை கேளு...

அடிமாட்டு வாழ்க்கையதை அடியுடனே வெட்டு..

உடலில் கணத்துக்கம் இருந்தால் கண்ணீரால் நீக்கு..


மனக்கணக்கு போடுவோரை உன் மதி கொண்டு வாட்டு..


நிலையற்ற வாழ்வுதனில் உன் நிம்மதியை தேடு..


நீண்டகால நினைப்புகளை நிஜமாவே மாற்று..


உலக்குக்காய் வாழ்வதனை உன் பிறப்பினிலே உணர்த்து..


இப்பிறப்பில் நீ செய்த தவறுகளை தாழ்த்து..


மனதாலே மங்கையரை மறைவாயே நோக்கு..


மனம் திறந்தால் மறைக்காமல் மணவறையை காட்டு..


இளமையினில் இளவயதை நீயும் இழக்காமல் பாரு..


முதுமையிலும் இளமனதை உன் முயற்சியினால் மாற்று..


மனு நீதி கண்டோரை உன் மனக்கண் முன் நோக்கு..


அநீதி அடங்காமை அதுகொண்டு போக்கு..


சிறப்பான உன் வாழ்வை சிலை போல ஆக்கு..


சிதறாமல் பதறாமல் உன் வாழ்நாளை நடத்து..


நீ செல்லும் பாதையெல்லாம் உன் நினைவாயே மாற்று..


மாறாமல் நீயிருந்தால் நீயே மாமனிதன் ஆகு ..


This entry was posted on 8:20 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: