காலத்தின் சக்கரத்தில் தோய்ந்திருக்கும் நிமிடங்கள்....

ஞாலத்தின் வாழ்வில் நான் கண்ட சில கணங்கள்....
மரணத்தின் பிடியிலும் உயிர் இழக்காத சில குணங்கள்....
தாராளமாய் வந்த தவிர்க்காத மன நிலைகள்....
நூலிழையில் சிதறிய என் சிறப்பான சிந்தனைகள்....
மனதில் சிற்பமாய் இருந்த உன் நினைவலைகள்...
தினம் பொழுதும் மனம் சொல்லும் மறவாத உன் வெருட்டல்கள்....
மன சினம் தள்ளும் சிறப்பான உன் நகைப்புகள் ...
நேராக மனம் மோதுமென்று மோப்பம் பிடித்த அந்நாட்கள்...
தளராத என் நெஞ்சில் தரம் கணித்த உன் மறு மொழிகள்..
மறுத்தாலும் பேச துடிக்கும் மறைவான உன் குணங்கள்...
தனித்திருந்த நொடிகளில் தவிர்க்காத உன் அமைவு..
சாவின் விளிம்பிலும் சளைக்காத என்னுடலில் உன் உயிரின் அமைவு..
பிணக்கங்களுக்காய் ஏங்கும் சோகங்களை பிதற்றலடிக்கும் உன் பேச்சு..
சுணக்கமில்லாமல் சத்தியம் பேசும் சாதுரிய மொழியழகு..
நேரத்துக்கு இடைஞ்சல் கொடுக்கும் நெருக்கமான ஓயா உரையாடல்கள்...
தாராளமாய் உன்னை கேட்ட அன்று ஓரமாய் ஒதுங்காத உன் ஒற்றை மன வேலி...
ஆதவனை பார்த்து அவனழகன் என்று பொறமை கொண்ட உன் சேய் நெஞ்சம்..
நிலாவும் பார்த்து வேற்றுமை சொல்ல துடிக்கும் உன் உடலழகு..
விசைப்பலகையில் உன் பெயரை மட்டும் அழுத்தும் என் விரல் அமைவு..
பாடல் வரியதில் உன்னையே வர்ணிக்கும் கவியழகு...
என் கையெழுத்தை நிலை மாற்றி உன் சொல்லெழுத்தாகும் உன் திறமை ...
என் வாழ்வின் தலையெழுத்தை மாற்ற துடிக்கும் சொந்த உறவு ...
பிரிவொன்றில் பிரிந்தாலும் பிறப்பினில் பிரியாத உன் சிறப்பு..
என் தூக்கத்தை நீடிக்கும் துடிப்பான உன் நினைவுக் கனவுகள்..
காற்றோடு கலந்திருக்கும் என் மூச்சில் உன் சுவாச காற்று...
சலசலப்பான இக்கவியில் சிலசலிப்பு காணாத உள்ளம்..
கலையொன்றாய் உன்னை கூறுகிறேன் கவனித்துதான் பார் என்னை ...


This entry was posted on 1:59 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: