கல்லூரி காலமதில் காணாத வாழ்வியல்பு ,இன்று நில்லாமல் சுவைக்கிறதே நீ வந்த நேரத்திலே...

மனதெல்லாம் உன் சுகம் வீசும், மாறுதலை என் மனதில் உணர்த்தும்,
பூ போன்ற உன்னாலே பூரிப்புத்தான் என் உள்ளாலே...

சொல்லாமல் செல்வாய் நீயும்,என் சோகபோதை தவிர்த்தாய் நீயும், செல்லரித்த என் வாழ்வில் செல்லமாயே வந்தாய் நீயே..


வானம் உன்னை வணங்கியதும் வாய்திறந்து முழங்கியதும் பூமியதன் விளிம்பில் நானும் புது மாரிமழை யுன்னால் நனைந்தேனே..

மாறுபட்ட என் மனதை புதுச்சாறு கொண்டு கரைத்தாய் நீ,தாறுமாறு இன்றி எனைஇன்று தரம் கணித்தும் விட்டாயே...

நிலாவதில் மெய் மறந்தேன் ,நானும் உன்னை இரா கனவில் நிதம் அதன் தோற்றம் உணர்ந்தேன், குணாவில் சிறந்தவள் உன்னை என் மன வினாக்கு விடையாய் இன்று கண்டதிலே...


நெஞ்சில் உள்ள நெகிழ்வுகளும் உன் மன பிஞ்சில் உள்ள பிரியங்களும் கொஞ்சிப்பேசி குலைகிறதே கோலமவள் உன்னாலே...

ஆசையென்னும் உணர்ச்சியில் அனுதினமும் அணைவாய் கிடந்தேன், என்னில்சாத்விகம் தந்தவள் உன்னை சத்தியமாய் நினைத்த பொழுதிலே...

மரணத்தில் வரம்பில் நானும் வழுக்கித்தான் கிடப்பேன் என்றால்,அந்நிமிடத்தின் நொடிப்பொழுதில் நீ வந்து எழுப்பாயா!!


This entry was posted on 5:47 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: