உன் அன்பினது ஈரம்  காயவில்லையென்று    எந்தன் ஆறுதல் எனக்கு சொல்கிறது..  


உன்  நட்பினது நன்மை பிறர்க்கு புரியவில்லையென்று  எம் பிரிவின்று பிதற்றுகிறது..


உன் சொற்கள் தான் மகிழ்வெனக்கென்று   என் சோகமின்று  இசைக்கிறது..  


உன் நிழல் போன்ற நட்பு  எங்கேயென்று என் நிழலின்று  யெனை  தொடர மறுக்கிறது..  


உன் கலையழகில் கவி சொல்லும் மெய்யான என்நாவும் இன்றோ சுவையின்றி  விறைகின்றது...  


உன் நிலையழகை  நிறுத்தாமல் கவிபுனையும் கைவிரலும் என் கையெழுத்தை மறக்கிறது..  


உன் கடல்நீல கருவிழிகள் என் மனக்கரை காண ஏங்கவில்லையென்று என் எண்ணவலையோசை  அலைகிறது..  


உன் சிரிப்பினது வெள்ளொளி  சிதறல்கள் விளங்கவில்லையென்று பிணைவான என் கண்ணிமைகள்  தமைபிரிய நினைக்கிறது.. 


உன் சிறுபிள்ளைத்தனத்தின் மனச்சிதையாமை எங்கென்று சிதறிய என் நெஞ்சின்  சிலதுகள்கள் அழுகிறது..  


என்  வருங்கால வாழ்விலுன்னை  வலைப்பூவில் காணுவாயென்று   கதறிய என்னிதயம் உதிரக்கவிபுனைய  வினைகிறது..  


This entry was posted on 8:51 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: