என் மனதை தைத்தவள்
நீ தையல் தேவதையே..
மனசை கிழித்ததும் நீயடி அதை
வருடி துவைத்ததும்  நீயடி..

தாராளமாய் வந்தவளே
பசும் தாமரையாய் இருந்தவளே
ஆதவனாய் இருந்து ரசிக்கின்றேன்
கணப்பொழுதும் மலர்வாயா
கண்களால் காணவில்லையடி
மனக்கன்னதுவும் திறந்தேனடி
உன் உருவம் காணவே என்னையும்
 நான் அறியேனடி..

எண்ணித்தான் வியந்தேனடி
உலகளவில் மலர்ந்தேனடி
புது மலராம் ரோஜாவாக புவனியிலே
உன் பவனியதை கண்டேனடி..

உன்னுடன் சொட்டுத்தேன்
களித்தனடி மனதளவில் சொக்கித்தான்
போனனடி சொல்லெதுவும்
என் வாயில் இல்லையே
சொல்லாமல் போட்டேனடி ..

காற்றதுவில் கலந்தவளே
மூச்சுக்காற்றாகி வந்தவளே
மூச்சுமடி திணறுதடி உன் மன
முக்காடும் விலத்திகாட்டடி..

முதுகெலும்பாய் இருந்தவளே
என்னுள்  முண்ணானாய் பிணைந்தவளே
உன்னை முட்டித்தான் பார்க்கிறேன்
என் மனம் முரடு தானடி..

கோவையாய் இருந்தவளே 
என்மன பூட்டையும் திறந்தவளே
நீ கோபித்தாலும் குறை சொல்லேன்
உன்மன சாந்தமும் நானடியோ.
இராகனவிலே சென்றவள் நீ
பட்டப்பகல் தனில் வந்தவள் நீ
என் மனதை ஒளியாகிதான் போனாய்
இரவதும் நான் தொலைத்தேனடி..

சோதனையை தந்தவள்
நீ மனதை சோதித்து பார்த்தாயடியே
சோகமாய்தான் நானடி மன
சோதிடனாய் இங்கு வாவடி..
மனதாலே கூப்பிட்டேன் மனதளவில்
இராக்கனவாக வந்தாய் நிஜமாக
அழைக்கிறேன்..
நிழல்போல தொடர்வாயா ...


This entry was posted on 1:50 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: